அஸ்ஸலாமு அலைக்கும்,முஸ்லிம் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி....?என்ற புதிய ஆக்கம் உங்கள் முகவை எக்ஸ்பிரஸில் வெளியிடப்பட்டுள்ளது !

29 July, 2010

சொன்னதை செய்வாரா கலைஞர்..?

'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு' என்று ஒருபுறம் எழுதிவைத்துக்கொண்டு அத்தகைய கேடானதை விற்பதற்கென 'டாஸ்மாக்' நிலையங்களை உருவாக்கி அதில் படித்த பட்டதாரிகளையும் பணியாளர்களாக்கி அரசு கஜானாவை நிறைத்துவருகிறது தமிழக அரசு. அரசின் பட்ஜெட் தேவையை நிறைவேற்றுவதில் மது வியாபாரம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. எனவே தான் பூரண மதுவிலக்கை பற்றி எப்போது கேள்வி எழுப்பினாலும் 'அது சாத்தியமில்லாதது' என்ற ர்ரீதியில்தான் கலைஞரின் பதில் அமைந்திருக்கும். ஆனால் ஆச்சர்யமாக பூரண மதுவிலக்கு குறித்து ஒரு சாதகமான பதிலை முதல்வர் தந்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை மட்டுமல்ல- மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்தவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் முதல்வர்.

முதல்வரின் இந்த செய்தி பூரண மதுவிலக்கை நோக்கி முதல்வர் பயணிப்பதை உறுதிப்படுத்துகிறது. செய்வதைத்தான் சொல்வோம்; சொல்வதைத்தான் செய்வோம் என்ற கொள்கையை கொண்ட முதல்வர், மதுவிலக்கு விசயத்திலும் அதை கடைபிடித்து பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை குடியில் இருந்து மீட்டெடுக்கும் அறிவிப்பை வெளியிட்டால், ஆண்டுகள் கடந்தும் அவர் சாதனை நிலைத்திருக்கும். ஏழைகள் மற்றும் பெண்கள் அவரை என்றென்றும் நன்றியோடு நினைவு கூர்வர்.
சொன்னதை செய்வார் கலைஞர் என்ற நம்பிக்கையோடு அந்த நல்ல செய்திக்காக மக்களோடு காத்திருக்கிறோம் நாமும்.[இறைவன் நாடினால்]

0 கருத்துரைகள்: